R_a_M
Reaction score
59

Profile posts Latest activity Postings About

  • போய்வருகிறேன் என்று விடைபெற்றுச் செல்ல திரும்பி வரும்போது காத்திருக்க தனக்கே தனக்கென இருக்கும் யாரோதான் இக்கொடும் வாழ்வின் ஆதாரப் பிடிமானம்.
    வலிந்து மேற்கொண்டு இயல்பைத் தொலைக்காமல் உடனிருந்து உடனிருந்து நீயென் வாழ்வின் பகுதியாகிப் போனபின்னே தோன்றட்டும் அது. . .
    கேள் சகி! காதலிக்கும் புதிதில் அக்கறைகள் என்பன சாகச நாடகம் மட்டுமே, அவற்றில் உள்ளார்ந்த உண்மை இருக்கப்போவதில்லை,
    பதிலாக அன்பைக் கூட வேண்டுவதில்லை, எவ்வளவு பிரியப்படுகிறோம் என்பது புரிந்துகொள்ளப்பட்டு விட்டாலே - போதுமென்றாகி மகிழ்ந்து போகிறது மனம். . .
    திருப்பி வந்துவிடாமல் எல்லோருக்கும் திரும்பிச் செல்வதற்கு ஒரு காலம் இருக்கிறது. அங்கு ப்ரியப்பட்ட யாரோவும் இருக்கிறார்கள்.
    ஓடுவதட்கோர் பாதை துரத்துவதட்கோர் வேட்டை நீ தந்த முத்த ஈரம் காய்வதற்குள் உன் மடி சேர்ந்திட வேண்டும்
    கேள் நண்பா உலகப் பெண்களிடத்து அமைந்திருப்பதெல்லாம் ஒரே நிர்வாணம் தான் அது பிரியப்பட்டவள் உடலில் மட்டுமே பிரகாசிக்கும். மற்றனைத்தும் இருள்
    ஒருவரை விரும்பத் துவங்குதல் என்பது காலம் முழுக்க அவரை மன்னித்துக் கொண்டே இருப்பதற்கு துணிதல்!
    நீயாக வந்து பேசுவாய் என்று நானும் நானாக வந்து பேசுவேன் என்று நீயும் யாரோ போல கடக்கிறோம் முடிவறியா பிரியத்தின் கேவல் உன் மனதிற்கும் கேட்டதா !
    அடிக்கடி தனிமையில் புகுந்துகொள்கிறேன். மிகுந்த பிரியமாயிருக்கிறது இத்தனிமை, பின்னே!! நீ தந்து போனதல்லவா !
    பேச ஒன்றுமில்லை என்றானபின், தொடரவும் முடியாமல் முடிக்கவும் தெரியாமல் எதிரெதிர் முனைகளில் நீளும் மௌனத்தின் அடர்த்தி மூச்சுமுட்டும்.......
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top